குழு தலைவர் - ரீடெய்ல் கிளை வங்கி, எச் டி எஃப் சி வங்கி

திரு. சம்பத் குமார்

திரு. சம்பத் குமார் அவர்கள் வங்கியின் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தை உள்ளடக்கிய சில்லறை வங்கி கிளையின் குழுத் தலைவராக உள்ளார்.

திரு. குமார் அவர்கள் தனது முந்தைய பணியில், சில்லறைப் பொறுப்பு இலாகாவை உருவாக்கும் பொறுப்பில் இருந்தார் - சர்வதேச மற்றும் வெளிநாட்டு கிளைகளுக்கு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குதல், தனியார் வங்கி குழு தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி, ATM, டீமேட், விர்ச்சுவல் உறவு மேலாளர் மற்றும் வணிக வங்கி குழு தயாரிப்புகளை வலுப்படுத்துதல்.

ஆகஸ்ட் 2000-யில் வங்கியில் சேர்வதற்கு முன்னர், திரு. குமார் இன்டிகிரேடட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் பணிபுரிந்தார்.

29 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு தொழில்முறை நிபுணரான திரு. குமார் அவர்கள் 2008 ஆம் ஆண்டில் இந்திய தனியார் வங்கித் துறையில் மிகப்பெரிய ஒப்பந்தம், 2014 ஆம் ஆண்டில் FCNR (B) வசூலில் வங்கியை முன்னணி நிலைக்கு இட்டுச் சென்றது மற்றும் வங்கியின் வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியது உள்ளிட்ட பல மைல்கற்களைக் கொண்டுள்ளார்.

திரு. குமார் அவர்கள் தமிழ்நாட்டின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இவரது தனிப்பட்ட நேரத்தில், இவர் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான தளங்களை உருவாக்குவதில் இவர் ஆர்வமாக உள்ளார்.