திரு. எஸ். சம்பத் குமார் எச் டி எஃப் சி பேங்கில் மேற்கு மற்றும் தென் பிராந்தியத்தை உள்ளடக்கிய ரீடெய்ல் கிளை வங்கி, ரீடெய்ல் டிரேட் அண்ட் ஃபாரெக்ஸ் மற்றும் ஆல்டர்னேட் பேங்கிங் சேனல் & பார்ட்னர்ஷிப்ஸின் குழுத் தலைவர் ஆவார்.
வங்கியுடனான தனது முந்தைய பதவியில், திரு. குமார் ரீடெய்ல் பொறுப்புத் துறைப் பிரிவின் மேம்பாட்டைக் கையாண்டார். அவர் வெளிநாட்டு மற்றும் சர்வதேச கிளைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் பணியாற்றினார். மேலும், அவர் பிரைவேட் பேங்கிங் குழுமம், தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி, ATM சேவைகள், டிமேட் கணக்குகள், மெய்நிகர் உறவு மேலாளர் மற்றும் வணிக வங்கி குழுமம் ஆகியவற்றிற்கான தயாரிப்புகளை வலுப்படுத்தவும் உதவினார்.
ஆகஸ்ட் 2000-யில் வங்கியில் சேர்வதற்கு முன்னர், திரு. குமார் இன்டிகிரேடட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் பணிபுரிந்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு நிபுணரான திரு. குமார், 2008 ஆம் ஆண்டில் இந்திய தனியார் வங்கித் துறையின் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது; 2014 ஆம் ஆண்டில் FCNR (B) வசூலில் வங்கியை முதலிடத்திற்கு வழிநடத்தியது மற்றும் வங்கிக்கு ஒரு வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையை வகுத்தது உட்பட பல தொழில்முறைச் சாதனைகளைப் படைத்துள்ளார்.
திரு. குமார் அவர்கள் தமிழ்நாட்டின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இவரது தனிப்பட்ட நேரத்தில், இவர் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான தளங்களை உருவாக்குவதில் இவர் ஆர்வமாக உள்ளார்.